திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்


திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

முக்கிய விழாவான தேரோட்டம் 7-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது.

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற 5-ஆம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா நாளை (புதன்கிழமை) காலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி 2-ந் தேதி காலை வெள்ளி சூரிய பிரபை வாகனத்திலும் இரவு பூத வாகனத்திலும், 3-ந் தேதி காலை சிம்மவாகனத்திலும் இரவு ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4-ந் தேதி காலை பல்லக்கு சேவை உற்சவமும் இரவு வெள்ளி நாக வாகனத்திலும், 5-ந் தேதி காலை அன்ன வாகனத்திலும் இரவு வெள்ளி மயில் வாகனத்திலும், 6-ந் தேதி மாலை 4:30 மணிக்கு புலி வாகனத்திலும் இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார்.

முக்கிய விழாவான தேரோட்டம் 7-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது. 8-ந் தேதி காலை யாலி வாகனத்திலும் தொடர்ந்து இரவு குதிரை வாகனம், தெய்வயானையம்மை திருக்கல்யாணம் நடக்கிறது.

1 More update

Next Story