உலகக்கோப்பை கால்பந்து: கானாவை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி..!


உலகக்கோப்பை கால்பந்து: கானாவை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி..!
x

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கானாவை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.

அதன்படி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஹெச் பிரிவில் இன்று இரவு நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கானா, உருகுவே அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தின் 26 நிமிடத்தில் உருகுவே வீரர் ஜார்ஜியன் அரராஸ்கேட்டா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து 32 நிமிடத்தில் அவர் மேலும் ஒரு கோல் அடிக்க முதல் பாதி முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி முன்னிலை பெற்றிருந்தது.

2-வது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்திய உருகுவே அணி வெற்றி பெற்றது.

இருப்பினும் ஹெச் பிரிவில் அடுத்த சுற்றுக்கு கோல்கள் அடிப்படையில் தென்கொரியா 2வது அணியாக முன்னேறியதால், கானாவும், உருகுவேயும் போட்டியில் இருந்து வெளியேறின.


Next Story