உலக கோப்பை கால்பந்து: நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த அர்ஜெண்டினா..!!


பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

தோகா,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று கத்தாரின் லுசைல் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி வீரர் மொலினா 35-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி முன்னிலை வகித்தது.

இதனையடுத்து வெற்றிபெறும் கட்டாயத்தில் இறங்கிய இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர். இந்த சூழலில் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அணிக்கான 2-வது கோலை பதிவு செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெதர்லாந்து அணி வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 மற்றும் 93+11 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றி முட்டுக் கட்டை போட்டார்.

இதனையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.

கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜெண்டினா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் நெதர்லாந்து 4 வாய்ப்புகளில் 1-ஐ வீணடித்தது.

பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.


Next Story