நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு


நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு
x
தினத்தந்தி 25 March 2025 8:00 AM IST (Updated: 25 March 2025 10:53 AM IST)
t-max-icont-min-icon

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் திடீரென வீடுகள் குலுங்கியதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் அதிர்ந்தன என்றும், இதனால் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் அங்குள்ள மக்கள் கூறினர். நியூசிலாந்தின் தெற்கு தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஏற்கனவே நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.

1 More update

Next Story