தீபாவளி பண்டிகை; பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
சென்னை,
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
அதன்படி , தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 1 ) பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





