மத்திய அரசு பள்ளியில் வேலை: 7,267 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? எனது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணி நிறுவனம்: மத்திய அரசு நடத்தும் ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளி (இ.எம்.ஆர்.எஸ்.)
காலி பணி இடங்கள்: 7,267 (கற்றல் மற்றும் கற்றல் பணி அல்லாதது)
பதவி: முதல்வர்-225, முதுகலை பட்டதாரி ஆசிரியர்-1,460, பட்டதாரி ஆசிரியர்கள், 3,962, ஸ்டாப் நர்ஸ் (பெண்) -550, ஆஸ்டல் வார்டன்-635, அக்கவுண்டெண்ட்-61, ஜூனியர் செகரட்டரியேட்-228, லேப் அசிஸ்டெண்ட்-146.
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, முதுகலை, இளங்கலை பட்டப்படிப்புடன் எம்.எட், பி.எட்., பி.எஸ்சி நர்சிங், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பு
வயது: முதல்வர் பதவிக்கு 50 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு 40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி ஆசிரியர், ஸ்டாப் நர்ஸ், ஆஸ்டல் வார்டன் பணிக்கு 35 வயதுக்குள்ளும், மற்ற பணிகளுக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
தேர்வு முறை: டையர்-1, டையர்-2, திறனறி தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-10-2025
இணையதள முகவரி: https://nests.tribal.gov.in/






