பெல் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


பெல் நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
x

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

சென்னை,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் புரொபேஷனரி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

மாதம் சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வரை

மொத்த காலிப்பணியிடங்கள்: 350

பணி விவரம்;புரொபேஷனரி இன்ஜினியர் ( எலக்ட்ரானிக்ஸ்) - 200 புரொபேஷனரி இன்ஜினியர் (மெக்கானிக்கல்) - 150

கல்வி தகுதி:

I.இன்ஜினியர் எலக்ட்ரானிக்ஸ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பி இ/ பிடெக்/ பி.எஸ்.சி ஆகிய பட்டப்படிப்புகளில் ஒன்றை படித்து இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ டெலி கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்து இருக்க வேண்டும்.

II.மெக்கானிக்கல் பணியிடத்திற்கு இன்ஜினியரிங் டிகிரியில் மெக்கானிக்கல் பிரிவை எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 01.01.2025 தேதிப்படி 25 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

எஸ்.சி/எஸ்.டி 5 ஆண்டுகளும்,

ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்,

பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்பு 10 ஆண்டுகளும் வழங்கப்படும்.

தேர்வு முறை: கணினி வழி தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: கணினி வழியிலான ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?: விருப்பமும் கல்வி தகுதியும் இருக்கும் தேர்வர்கள் https://bel-india.in/job-notifications/ - என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி; 31/01/2025

மேலும் விவரங்களுக்கு

1 More update

Next Story