நீட் தேர்வு: 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்


நீட் தேர்வு: 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
x

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை,

அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கியது. இதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்று வலைதளம் வழியாக நாளை (9-ந்தேதி) முதல் 11-ந்தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம்.இல்லையெனில் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ந்தேதி வெளியிடப்படும். அதன்படி முடிவுகள் ஜூன் 14-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story