பீகாரில் 17 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் மாயம்

பீகாரில் 17 பேர் பயணம் செய்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
பாட்னா,
பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பார்ஹ் என்ற இடத்தில் கங்கை நதியில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த படகில் மொத்தம் 17 பேர் பயணம் செய்ததாகவும், அதில் பெரும்பாலானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





