அகமதாபாத் விமான விபத்து: மல்லிகார்ஜுன கார்கே வேதனை


அகமதாபாத் விமான விபத்து: மல்லிகார்ஜுன கார்கே வேதனை
x

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. விமானத்தில் இருந்த 242 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

குஜராத்தின் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கொடூரமான காட்சிகளைப் பார்ப்பது மனதை வேதனைப்படுத்துகிறது.

பயணிகள், விமானி மற்றும் விமானி ஆகியோரின் குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த அனுதாபங்கள், எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குமாறு காங்கிரஸ் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story