ஆங்கிலம் குறித்து அமித்ஷா பேச்சு - ராகுல்காந்தி விமர்சனம்

ஏழைகள் கேள்வி கேட்பதையோ, முன்னேறுவதையோ பாஜக விரும்புவதில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஐ.ஏ.எஸ். அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய ''மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'' (சிறு துளியாய் கடல் ஆவேன்) என்ற புத்தகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
அன்னிய மொழிகளால் இந்தியாவை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏனெனில், ஒருவரின் வரலாறு, கலாசாரம் மற்றும் மதத்தை அன்னிய மொழியில் புரிந்து கொள்ள முடியாது. இந்த நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும். அது வெகு தொலைவில் இல்லை என்றார்.
இந்தநிலையில்,ஆங்கிலம் குறித்து அமித்ஷா பேசிய கருத்திற்கு ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
இன்றைய உலகில் தாய் மொழியை போலவே ஆங்கிலமும் மிக முக்கியமானது. ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல அதிகாரம், ஆங்கிலம் கை விலங்கல்ல, விலங்கை உடைக்கும் கருவி. ஏழைகள் கேள்வி கேட்பதையோ, முன்னேறுவதையோ பாஜக விரும்புவதில்லை எனக்கூறியுள்ளார்.






