திருமண நிகழ்ச்சியில் மதுபோதையில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட தடகள வீரர் அடித்துக்கொலை


திருமண நிகழ்ச்சியில் மதுபோதையில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட தடகள வீரர் அடித்துக்கொலை
x

தடகள வீரரான இவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

சண்டிகர்,

அரியானா மாநிலம் ரோஹட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோகித் திவாகர். தடகள வீரரான இவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், ரோகித் திவாகர் கடந்த 27ம் தேதி தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். திருமண நிகழ்ச்சியில் சிலர் மதுபோதையில் தகராறு செய்துள்ளனர். தகராறு செய்தவர்களை ரோகித் திவாகர் தட்டிக்கேட்டுள்ளார்.

பின்னர், திருமணம் முடிந்து திவாகர் தனது நண்பர்களுடன் காரில் புறப்பட்டுள்ளார். அப்போது அந்த காரை பின்தொடர்ந்து 3 கார்களில் கும்பல் வந்துள்ளது.

திவாகரின் காரை இடைமறிந்த அந்த கும்பல் காரில் இருந்த திவாகரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் திவாகர் படுகாயமடைந்தார். இதையடுத்து, படுகாயமடைந்த திவாகரை மீட்ட அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவாகர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய 10க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story