பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது


பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 14 Oct 2025 2:45 AM IST (Updated: 14 Oct 2025 2:46 AM IST)
t-max-icont-min-icon

2-ம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும்.

பாட்னா,

243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்டமாக 121 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கு கடந்த 10-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 2-ம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும். வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 23-ந்தேதி என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்படுகிறது.

1 More update

Next Story