முதல்-மந்திரி பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமார் கருத்துக்கூற மறுப்பு

டி.கே.சிவக்குமாருக்கு போதிய எண்ணிக்யைல் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை.
முதல்-மந்திரி பதவி விவகாரம்: டி.கே.சிவக்குமார் கருத்துக்கூற மறுப்பு
Published on

பெங்களூரு.,

முதல்-மந்திரி சித்தராமையா மகன் யதீந்திரா கருத்து தொடர்பாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து தான் கருத்துக்கூற மாட்டேன். இதுபற்றி விவாதிக்கப்படும் என்றும் அவர் பதிலளித்தார். வருகிற நவம்பர் மாதம் ஆட்சி தலைமை அதாவது முதல்-மந்திரி சித்தராமையா மாற்றப்படுவாரா? அல்லது அவரே நீடிக்க காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஒருவேளை சித்தராமையா மாற்றப்பட்டு டி.கே.சிவக்குமார் அரியணையில் அமர்த்தப்பட்டால், கர்நாடக அரசியலில் குழப்பங்கள் ஏற்படும். ஏனெனில் டி.கே.சிவக்குமாருக்கு போதிய எண்ணிக்யைல் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com