டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல்


டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 10 Nov 2025 10:44 PM IST (Updated: 10 Nov 2025 11:22 PM IST)
t-max-icont-min-icon

காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தெரிவித்து இருப்பதாவது; “டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அதிகாரிகளிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தேன்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story