கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கறிஞர்

ஓட்டல் அறையில் இளம்பெண்ணை வழக்கறிஞர் ஜிதேந்திர தாக்கிரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு; பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கறிஞர்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் எட்மத்பூரை சேந்த 24 வயது இளம்பெண், கடந்த 2022-ம் ஆண்டு 3 நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆக்ரா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 நபர்களில் ஒருவரான சுதீப் லவானியா சார்பில் ஜிதேந்திர தாக்ரே என்ற வழக்கறிஞர் ஆஜராகி கோர்ட்டில் வாதாடினார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண் வழக்கு விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை ஆக்ரா வந்தார். கோர்ட்டு விசாரணை முடிந்த பிறகு அந்த பெண்ணை வழக்கறிஞர் ஜிதேந்திர தாக்ரே தனியாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்த வழக்கை சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், நேரமாகிவிட்டதால் ஊருக்கு செல்ல வேண்டாம் என்றும், அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தருவதாகவும் ஜிதேந்திர தாக்ரே கூறியுள்ளார். பின்னர் அவரே அந்த பெண்ணை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து ஓட்டல் அறையில் அந்த பெண்ணை ஜிதேந்திர தாக்கிரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கிருந்து ஒருவழியாக தப்பிச்சென்ற இளம்பெண், இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்துவதற்காக ஜிதேந்திர தாக்ரே வீட்டிற்கு சென்றனர். அப்போது ஜிதேந்திர தாக்ரே போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த போலீசார், பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com