சத்தீஷ்காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்

மாயமான சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சத்தீஷ்காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் மாவட்டம் கொஸ்ரா கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 31ம் தேதி வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். சிறுமி மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மாயமான சிறுமி ஊருக்கு அருகே உள்ள வயல் பகுதியில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் கோடாரியால் வெட்டிக்கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்திய போலீசார், சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமான 24 வயது இளைஞரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த இளைஞர் தான் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கோடாரியால் வெட்டிக்கொன்றது உறுதியானது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞரை சிறையில் அடைத்தனர்.   இளைஞரின் பெயர் உள்ளிட்ட விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com