மசோதாவுக்கு ஒப்புதல்: கவர்னருக்கு கெடு விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு


மசோதாவுக்கு  ஒப்புதல்: கவர்னருக்கு கெடு விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 20 Nov 2025 11:03 AM IST (Updated: 20 Nov 2025 3:50 PM IST)
t-max-icont-min-icon

மசோதாவை கிடப்பில் போட கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது.செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை வாசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு கூறியதாவது:

  • மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த பதிலும் அளிக்காமல் கவர்னர்களால் கிடப்பில் போட முடியாது.
  • கால வரம்பின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க கவர்னர்களுக்கு அதிகாரம் இல்லை.
  • மத்திய அரசு குறிப்பட்டதை போல் கவர்னருக்கு 4-வது தெரிவு கிடையாது, 3 தெரிவுகள் மட்டுமே இருக்கின்றன.
  • மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல், நிராகரித்தல் மற்றும் விளக்கத்துடன் சட்டப்பேரவைக்கு அனுப்புதல் அல்லது அதை ஜனாதிபதிக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குதான் கவர்னருக்கு விருப்புரிமை உள்ளது.
  • மசோதவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை எங்களால் ஏற்க முடியாது.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தில் இயக்கும் முதன்மையான அதிகார அமைப்பாக இருக்க முடியும். கவர்னர்கள் மாநில அரசுக்கு இடையூறு விளைவிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளக் கூடாது.
  • ஒரு மசோதா சட்டமாக மாறும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும்.
  • இதேபோல், நம்மைப் போன்ற ஜனநாயக நாட்டில், கவர்னர்களுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. சுப்ரீம் கோர்ட்டின் மகத்தான அதிகாரத்தை வழங்கும் பிரிவு 142-ஐ மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க பயன்படுத்த முடியாது.
  • தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்து சுப்ரீம் கோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது
  • மசோதா மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.” இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story