குஜராத்: துணி தொழிற்சாலையில் தீ விபத்து - 2 பேர் பலி; 20 பேர் காயம்

சூரத் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
சூரத்,
குஜராத்தின் சூரத் நகரில் ஜோல்வா கிராமத்தில் துணி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் இன்று மதியம் திடீரென ரசாயன டிரம் ஒன்று வெடித்து உள்ளது. இதில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சூரத் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. இந்த வெடிவிபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. தகவல் அறிந்து 10 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், பல மணிநேரம் தீ அணையாமல் உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story






