விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு


விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் திறப்பு
x

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் இந்தியாவின் மிக நீள​மான கண்​ணாடி நடை​பாலம் மக்​களின் பயன்பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டுள்​ளது.

விசாகப்பட்டினம்,

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் இந்தியாவின் மிக நீள​மான கண்​ணாடி நடை​பாலம் மக்​களின் பயன்பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டுள்​ளது.இந்த கண்​ணாடி நடைபாலம், விசாகப்​பட்​டினத்​தில் கைலாசகிரி மலை உச்​சி​யில் அமைந்​துள்​ளது. கடல் மட்​டத்​தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்​தில் 55 மீட்​டர் நீளத்​தில் கேன்​டிலிவர் பால​மாக இது கட்​டப்​பட்​டுள்​ளது.

விசாகப்​பட்​டினம் மாநகர வளர்ச்சி ஆணை​யத்​தால் ரூ.7 கோடி செல​வில் கட்​டப்​பட்ட இப்​பாலத்​தின் கண்​ணாடிகள் ஜெர்​மனி​யில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்​டுள்​ளன. 40 மி.மீ. தடிமன் கொண்ட உயர்தர மூன்று அடுக்கு கண்​ணாடி, 40 டன் வலு​வூட்​டப்​பட்ட எஃகு இதில் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த அமைப்பு மணிக்கு 250 கி.மீ. வேகத்​தில் வீசும் புயல் மற்​றும் சூறாவளி காற்றை தாங்​கக் கூடியது.இப்​பாலம் தின​மும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பொது​மக்​களுக்கு திறந்​திருக்​கும் எனவும் 15 நிடங்​களுக்​கான கட்​ட​ணம் ரூ.300 எனவும் அறிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

1 More update

Next Story