காஷ்மீர் என்கவுன்டர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீர் என்கவுன்டர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 23 April 2025 10:13 AM IST (Updated: 23 April 2025 11:11 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்புப்பணியில் இருந்த எல்லைப்பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் நகரின் பைசாரன் மலைப்பகுதியில் நேற்று மதியம் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து சர்வதேச எல்லை வழியாக இன்று அதிகாலை காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி நலா பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த எல்லைப்பாதுகாப்புப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story