வகுப்பறை மேற்கூரை இடிந்து விபத்து; ஆசிரியை, 2 மாணவர்கள் காயம்


வகுப்பறை மேற்கூரை இடிந்து விபத்து; ஆசிரியை, 2 மாணவர்கள் காயம்
x

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் கஜேந்திரகட் பகுதியில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் உள்ள வகுப்பறையில் இன்று மாணவ, மாணவியருக்கு ஆசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வகுப்பறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஆசிரியை மற்றும் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.

இது குறித்து அறிந்த சக பள்ளி ஊழியர்கள் , காயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story