விபத்து வழக்கு: தலைமறைவாக இருந்த குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப்பின் கைது

டெல்லியின் ஹர்ஸ்டல் விஹார் பகுதியை சேர்ந்தவர் விகாஷ்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் ஹர்ஸ்டல் விஹார் பகுதியை சேர்ந்தவர் விகாஷ் (வயது 29). இவர் கடந்த 2015ம் ஆண்டு விபத்து வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதேவேளை, இந்த வழக்கில் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவானார். கடந்த 10 ஆண்டுகளாக விகாஷ் தலைமறைவாக வசித்து வந்தார்.
இந்நிலையில், ஹர்ஸ்டல் விஹார் பகுதியிலேயே விகாஷ் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்திய போலீசார், விகாசை கைது செய்தனர். , அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விகாஷ் மீது மேலும் 13 குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விகாசை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story






