ஜார்க்கண்ட் என்கவுன்டர்; மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை


ஜார்க்கண்ட் என்கவுன்டர்; மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
x

ஜார்க்கண்ட் என்கவுன்டரில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ராஞ்சி,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் கோயில்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவுதா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் ஒரு மாவோயிஸ்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அந்த இடத்தில் சில மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story