கேரளாவில் பருவமழை தீவிரம்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


கேரளாவில் பருவமழை தீவிரம்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
x

மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக நேற்றைய தினம் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் திருச்சூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய தினம் கேரளாவில் உள்ள 5 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையோடு காற்றின் வேகம் மணிக்கு சுமார் 40 முதல் 50 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடும் என்பதால், கேரள மீனவர்கள் நாளை வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

1 More update

Next Story