தேசிய கீதம் நம் நாட்டை ஒருங்கிணைக்கிறது : திமுக எம்.பி., ஆ.ராசா பேச்சு

11 ஆண்டுகளாக பிரதமரின் பேச்சை கேட்டு வருகிறேன் என ஆ.ராசா கூறியுள்ளார்.
தேசிய கீதம் நம் நாட்டை ஒருங்கிணைக்கிறது : திமுக எம்.பி., ஆ.ராசா பேச்சு
Published on

புதுடெல்லி,

நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து இன்று மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தநிலையில், மக்களவையில் வந்தே மாதரம் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசியதாவது:-

இந்தியாவில்தான் தேசிய கீதம், தேசிய பாடல் என்று தனித்தனியே இருக்கின்றன.தேசிய கீதம் நம் நாட்டை ஒருங்கிணைக்கிறது. பிளப்பட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசியகீதம் அவசியம். 11 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் பேச்சை கேட்டு வருகிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com