தேர்தல் ஆணையம் ஒன்றும் கோர்ட்டு அல்ல - ப.சிதம்பரம் விமர்சனம்


தேர்தல் ஆணையம் ஒன்றும் கோர்ட்டு அல்ல - ப.சிதம்பரம் விமர்சனம்
x

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கும் இந்த நாட்டின் வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த வாரம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது கடந்த காலங்களில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குகளை திருடித்தான் ஆட்சியைபிடித்தது. குறிப்பாக கர்நாடகாவின் மத்திய தொகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதாகவும் ஒருவரே 2 முறை வாக்களித்ததாகவும் ஆதாரங்களுடன் விளக்கினார்.

இந்தநிலையில் ராகுல்காந்திக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுல்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும்தான். அதற்கு நியாமான முறையில் தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பு உள்ளது. மாறாக கேள்வி கேட்பதற்கு அது கோர்ட்டு அல்ல. 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் 20(3) பி பிரிவுன் கீழ் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான உரிமை கோரலை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்த வழக்குக்கு மட்டுமே இது பொருந்தும். ஒரு முழு சட்டமன்றத்தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு நடந்தாக கூறப்படும் பட்சத்தில் இது பொருந்ததாது. புகார்களை ஏற்க மறுத்தால், ஜனநாயகத் தேர்தல்கள் கேள்விக்குறியாகும். தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கும் இந்த நாட்டின் வாக்காளர்களுக்கும் கடமைப்பட்டுள்ளது என அதில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story