காதலித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

பாதிக்கப்பட்ட இளம்பெண் உடுப்பி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் உடுப்பி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் கர்கேரா (வயது 28). இவருக்கும் உடுப்பி டவுன் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தங்களது காதலை செல்போன் மூலம் வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி சஞ்சய் கர்கேரா இளம்பெண்ணை கல்லசே மலையேற்றத்திற்கு அழைத்து சென்றார். அங்கு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இளம்பெண்ணை அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
தற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண் வலியுறுத்தினார். ஆனால், திருமணம் செய்ய சஞ்சய் கர்கேரா மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் உடுப்பி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் கர்கேராவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.