17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது


17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது
x

புதுவையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில் 17 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,278 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று 6 பேர் குணமடைந்தனர்.

தற்போது புதுச்சேரியில் 9 பேர், ஏனாமில் 8 பேர் என 17 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 72 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 431 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 117 பேரும் செலுத்திக்கொண்டனர்.

இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது 17 லட்சத்து 439 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


Next Story