மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது

மூலக்குளம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்
ரெட்டியார்பாளையம் போலீசார் கம்பன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உழவர்கரை வயல்வெளி தெருவை சேர்ந்த லெனின் பிஷப் (வயது 21), ரெட்டியார்பாளையம் கம்பன் நகரை சேர்ந்த ஹரிஷ் (22) என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





