பொதுஇடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது


பொதுஇடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது
x

நெடுங்காடு, கோட்டுச்சேரி பகுதியில் பொதுஇடத்தில் ரகளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நெடுங்காடு அன்னவாசல் மெயின்ரோடு அருகே, பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் 2 பேர் ஆபசமாக பேசி ரகளையில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அப்பகுதிமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், நெடுங்காடு போலீசார் அங்கு வந்து 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருவாரூர் வேலங்குடி பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது30), அவரது நண்பர் மயிலாடுதுறை குத்தாலம் மாதிரிமங்களத்தை சேர்ந்த வசந்த் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கோட்டுச்சேரி பூவம் மார்க்கெட் பஸ் நிறுத்தம் பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறாக பொதுஇடத்தில் ரகளையில் ஈடுபட்ட மயிலாடுதுறை பொறையார் மரகதம் காலனியை சேர்ந்த ராஜா (43), கிருஷ்ணன் (44) ஆகிய 2 பேரை கோட்டுச்சேரி போலீசார் கைது செய்தனர்.


Next Story