இறந்து கிடந்த முதியவர்


இறந்து கிடந்த முதியவர்
x

கிருமாம்பாக்கத்தை அடுத்த முள்ளோடை பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்த கிடந்தார்.

பாகூர்

கிருமாம்பாக்கத்தை அடுத்த முள்ளோடை நுழைவுவாயில் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருமாம்பாக்கம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story