இரு தரப்பினர் மோதல்


இரு தரப்பினர் மோதல்
x

புதுவையில் இரு தரப்பினர் மோதியதில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுச்சேரி

முத்தியால்பேட்டை டி.வி.நகரை சேர்ந்தவர் சந்துரு (வயது 25). ஏ.சி. மெக்கானிக். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபு என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story