முட்டை குழம்பு சாப்பிட்ட பெண் திடீா் சாவு


முட்டை குழம்பு சாப்பிட்ட பெண் திடீா் சாவு
x

நெடுங்காட்டில் முட்டை குழம்பு சாப்பிட்ட பெண் திடீரென இறந்தார்.

நெடுங்காடு

நெடுங்காட்டில் முட்டை குழம்பு சாப்பிட்ட பெண் திடீரென இறந்தார்.

முட்டை குழம்பு

காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சவுரியா கோவில் தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ். அவரது மனைவி ஜெலின்மேரி. (வயது 42). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெலின்மேரிக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருந்து சாப்பிட்டு வந்தார்.

நேற்று இரவு ஜெலின்மேரி முட்டை குழம்பு சாப்பிட்டுள்ளார். அது சரி வர செரிமானம் ஆகாததால் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.

பெண் சாவு

அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெடுங்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெலின்மேரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அற்புதராஜ் கொடுத்த புகாரின்பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story