அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் மையம்


அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் மையம்
x
தினத்தந்தி 19 Aug 2023 5:39 PM GMT (Updated: 19 Aug 2023 6:08 PM GMT)

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் மையங்களை ஏற்படுத்துமாறு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.

காரைக்கால்

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டயாலிசிஸ் மையங்களை ஏற்படுத்துமாறு கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.

ஆஸ்பத்திரியில் ஆய்வு

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் குலோத்துங்கன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் டாக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், புதிதாக அமையவிருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

அடிப்படை வசதி

பின்னர், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், கூடுதல் டயாலிசிஸ் மையங்களை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்த அறிவுறுத்தினார். குறிப்பாக, இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி பொதுப்பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

அதேபோல், அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளும் தினசரி தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர் வழங்கவும், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 24 மணி நேரமும் ஆஸ்பத்திரியில் இருக்கவும் கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தினார்.


Next Story