ஆட்டோ திருட்டு

புதுப்பேட்டை அருகே வீட்டின் முன்புறம் நிறுத்தி இருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
லாஸ்பேட்டை புதுப்பேட்டை புதுதெருவை சேர்ந்தவர் விநாயகவேலு (வயது32). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. மர்மநபர் யாரோ ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





