நிரவி போலீஸ் நிலையத்துக்கு விருது

நிரவி போலீஸ் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்பட்டது.
காரைக்கால், ஜூன்.25-
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் போலீஸ் நிலையத்திற்கு விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி 2022-ம் ஆண்டு மாநில அளவில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவி போலீஸ் நிலையம் சிறந்த விருதை பெற்றது.
இந்த விருதை முதல்-அமைச்சர் ரங்கசாமி போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து நிரவி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்தினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





