பாகூர் போலீஸ் நிலையம் ரூ.30 லட்சத்தில் சீரமைப்பு


பாகூர் போலீஸ் நிலையம் ரூ.30 லட்சத்தில் சீரமைப்பு
x

பாகூர் போலீஸ் நிலையத்தை ரூ.30 லட்சத்தில் சீரமைப்புக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

பாகூர்

பாகூரில் உள்ள போலீஸ் நிலையம் பழுதடைந்து இருந்ததுது. அதை பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடங்கள் பிரிவு மூலம் சீரமைக்க திட்டமிடப்பட்டது.அதற்காக ரூ.30 லட்சத்து 77 ஆயிரம் நிதி ஒதுக்கபப்ட்டு சீரமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் ஏகாம்பரம் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story