கடற்கரையில் தூய்மைப்பணி


கடற்கரையில் தூய்மைப்பணி
x

காரைக்கால் மாவட்ட கடற்கரை பகுதியில், மாவட்ட நிர்வாகம், பேரிடர் மீட்புத்துறை சார்பில் தூய்மைப்பணி நடந்தது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட கடற்கரை பகுதியில், மாவட்ட நிர்வாகம், பேரிடர் மீட்புத்துறை சார்பில் தூய்மைப்பணி நடந்தது.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தார். துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டதோடு, கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். கடற்கரையில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.


Next Story