8 கோவில்களின் உண்டியல் வருவாய் ரூ.8½ லட்சம்


8 கோவில்களின் உண்டியல் வருவாய் ரூ.8½ லட்சம்
x

காரைக்கால் பகுதிகளில் உள்ள 8 கோவில்களின் உண்டியல் வருவாய் ரூ.8½ லட்சம் வங்கியில் செலுத்தப்பட்டது.

காரைக்கால்

காரைக்கால் கைலாசநாதர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான காரைக்கால் அம்மையார், சித்தி விநாயகர், பொய்யாத மூர்த்தி விநாயகர், அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகாமாரியம்மன், உள்ளிட்ட 8 கோவில்கள் உள்ளன.

ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது உற்சவம் நடைபெற்று முடிந்த காலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் இந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த மே மாதம் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

இதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல்கள் மூலம் ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்து 130 கிடைத்ததாகவும், அதனை வங்கியில் செலுத்தப்பட்டதாகவும் கோவில் அறங்காவல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Next Story