பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம்

லாஸ்பேட்டையில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி ரத்தான முகாம் நடந்தது.
புதுச்சேரி
பிரதமர் நரேந்திரமோடி 73-வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செல்வகணபதி எம்.பி. அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு செல்வகணபதி எம்.பி. தலைமை தாங்கினார். முகாமில் பிரதமரின் மோடியின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 பேர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.
அவர்களிடம் ஜிப்மர் மருத்துவக் குழுவினர் டாக்டர் டயானா தலைமையிலும், அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினரும் ரத்தத்தை சேகரித்தனர். முகாமில் அசோக்பாபு எம்.எல்.ஏ., பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





