மதுபாட்டில் விற்றவர் கைது


மதுபாட்டில் விற்றவர் கைது
x

மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அய்யனார் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர், உருளையன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த வடிவு என்ற வடிவழகன் (வயது 37) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 More update

Next Story