தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி


நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோட்டுச்சேரி

நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கொழு கொழு குழந்தை போட்டி நடைபெற்றது. மருத்துவ அதிகாரிகள் ஹரிமதி, லாவண்யா ஆகியோர் தலைமை தாங்கினர். ரெட் கிராஸ் சொசைட்டி துணை தலைவர் சோழ சிங்கராயர், நிர்வாகக்குழு உறுப்பினர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை தலைவர் டாக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு தாய்ப்பாலின் நன்மைகள் குறித்து பேசினார். தொடர்ந்து கொழு கொழு குழந்தை போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர்கள், தாய்மார்கள், கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர்.


Next Story