தூக்குப்போட்டு கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் தற்கொலை


தூக்குப்போட்டு கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் தற்கொலை
x

பாகூர் அருகே கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பாகூர்

கடலூர் மாவட்டம் சின்ன கங்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 39). இவர் கிருமாம்பாக்கம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து அங்கு கம்ப்யூட்டர் மையம் நடத்தி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், தங்கியிருந்த வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது சொத்தை ஏதேனும் கோவிலுக்கு எழுதி வைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story