இரு தரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
தவளக்குப்பத்தில் மேதலில் ஈடுப்பட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் அருகே பிள்ளையார்திட்டு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 45). இவர் வீட்டில் மளிகை கடை வைத்துள்ளார். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story