ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி


ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
x

கூடப்பாக்கத்தில் ரூ.30 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்

வில்லியனூர்

ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட கூடப்பாக்கத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சாய்.சரவணன்குமார், பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு மூலம் ரூ.30 லட்சத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

அதன்பேரில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த பணியை அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தொகுதி தலைவர் சாய் தியாகராஜன், அரசு அதிகாரிகள், பா.ஜ.க. பிரமுகர்கள், குடிநீர் பொறுப்பாளர் பாலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story