புதிதாக 8 பேருக்கு கொரோனா


புதிதாக 8 பேருக்கு கொரோனா
x

புதுவையில் புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 394 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த 6 பேர், ஏனாமை சேர்ந்த 2 பேர் என 8 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று முன்தினம் புதிதாக 21 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றறைய பாதிப்பு சற்று குறைவாகும். இன்று 7 பேர் குணமடைந்தனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 3 பேர், வீடுகளில் 126 பேர் என 129 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 5 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 66 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 28 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 30 ஆயிரத்து 674 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


Next Story