இறைச்சி, மீன் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்


இறைச்சி, மீன் கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்
x

புரட்டாசி சனிக்கிழமைகள் முடிந்த நிலையில் நேற்று இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுச்சேரி

புரட்டாசி சனிக்கிழமைகள் முடிந்த நிலையில் நேற்று இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புரட்டாசி சனிக்கிழமை

பெருமாளுக்கு உகந்த நாளாக புரட்டாசி மாதம் சனிக்கிழமைகள் உள்ளன. இந்த நாட்களில் பெரும்பாலான இந்துக்கள் விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

இந்த விரதத்தின்போது அவர்கள் இறைச்சி வகைகளை உண்ணுவது கிடையாது. இந்தநிலையில் புரட்டாசி மாதம் முடிய உள்ள நிலையில் கடைசி சனிக்கிழமையானது நேற்று வந்து போனது.

மக்கள் கூட்டம்

இதைத்தொடர்ந்து பக்தர்கள் இன்று இறைச்சி உண்டு தங்களது விரதத்தை முடித்துக்கொண்டனர். இதன் காரணமாக மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன், நண்டு போன்றவற்றின் விற்பனை ஜோராக நடந்தது.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று வழக்கத்தைவிட மீன் மற்றும் இறைச்சிகளின் விலையும் சற்று அதிகமாக இருந்தது.


Next Story