பொதுமக்களிடம் ரகளை; வாலிபர் கைது

கோட்டுச்சேரி அருகே பொதுமக்களிடம் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
கோட்டுச்சேரி
திரு-பட்டினம் போலகம் புறவழிச்சாலையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திரு-பட்டினம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திரு-பட்டினம் கே.பி.எம்.தோட்டத்தை சேர்ந்த சேத்தப்பா என்ற ஹமீது (வயது 32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





