சலவை தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை


சலவை தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை
x

புதுச்சோியில் சலவை தொழிலாளா்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என வண்ணார்குல ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கை வைத்தனா்.

புதுச்சேரி

புதுச்சேரி வண்ணார் சமுதாய முன்னேற்ற மத்திய கூட்டமைப்பின் 4-வது செயல்விளக்க கூட்டம் புதுவை தமிழ்சங்கத்தில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு வண்ணார்குல ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலாளர் கண்ணன் தேவராஜன் கலந்துகொண்டு பேசினார். புதுவை கூட்டமைப்பு கவுரவ தலைவர் கண்ணையன், தலைவர் கலியபெருமாள், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் 59 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும். சலவைத்தொழில் செய்யும் வண்ணார் சமூகத்தினருக்கு மானியத்தில் மின்சாரம் வழங்கவேண்டும். சாலையோரத்தில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு பெட்டிக்கடை வழங்குவதுபோல் சலவை தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் மின்சார இணைப்புடன் கூடிய பெட்டிக்கடை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story